பறவைக் காய்ச்சல் அதிகரித்து வரும் மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வாரம் ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில், கொரோனா நோயாளிகளின் அவசர கால மருத்துவப் பயன்பாட்டிற்காக, கோவிஷீல்டு தடுப்பூசியை பயன்படுத்த அனுமதிக்கலாம் என மத்திய அரசுக்கு, மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாய சங்கங்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த சுற்று பேச்சுவார்த்தை, ஜனவரி 4ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.