பொங்கல் பண்டிகையையொட்டி, வருகிற 14ம் தேதி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கு உடல் தகுதி தேர்வு நேற்று நடந்த நிலையில், அனுமதி சீட்டு வழங்கப்பட்ட 430 மாடுபிடி வீரர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை நடைபெற்றது.
கட்டுமான தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க ஆணையிட்ட, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, அத்துறையை சேர்ந்த தொழிலாளர்கள் மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துள்ளனர்.