
NewsJ is a popular online newsportal and going source for technical and digital content for its influential audience around the globe. You can reach us via email or phone.
ன்னை தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட 6 துறைகளுக்கான நலத்திட்டங்களை முதலமைச்சர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார். 103 கோடி 4 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த நடத்திட்டப்பணிகள், அம்பத்தூர், ஆலந்துர் உள்ளிட்ட பகுதிகளில் 6 பூங்காக்கள், சிறுவர் விளையாட்டு அரங்கங்கள் மற்றும் குடிநீர் திட்டப் பணிகள் ஆகியவற்றையும் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இதேபோல், திருச்சிராப்பள்ளி, தருமபுரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 160 கோடி 34 லட்சம் மதிப்பீட்டில் 3 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் 7 ஆற்றுப்பாலங்களையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அமைச்சர் எஸ்பி வேலுமணி, அமைச்சர் பென்ஜமின், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Successfully posted