
NewsJ is a popular online newsportal and going source for technical and digital content for its influential audience around the globe. You can reach us via email or phone.
காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றில் இருந்த மதகு பாலம் இடிந்தது. இங்கு தற்காலிகமாக நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீர்வரத்து அதிகமாக இருந்ததால் மதகுகள் இடிந்து விழுந்ததாக கூறினார். கொள்ளிடம் நடுக்கரை குறுகிய பகுதியாக இருப்பதால் பெரிய கற்களை லாரிகளின் மூலம் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், எனவே, சீரமைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
Successfully posted