
NewsJ is a popular online newsportal and going source for technical and digital content for its influential audience around the globe. You can reach us via email or phone.
முப்பெரும் தேவியரை வழிபடும் நவராத்திரி விழா நாடு முழுவதும் கோலாகலமாக தொடங்கியது.
ஒவ்வொரு ஆண்டும், புரட்டாசி மாதம் மகாளய அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை தொடங்கி தசமி வரை நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த 9 நாட்களும் வீடுகளில் கொலு வைத்து மக்கள் மகிழ்வர். இதில் முதல் 3 நாட்கள் துர்க்கையையும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியையும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதியையும் வழிபடுவார்கள். தமிழகத்தில் மட்டுமின்றி வட மாநிலங்களிலும் நவராத்திரி விழா தசரா என்று கொண்டாடப்படுகிறது. சென்னையில் ஏராளமானோர் தங்களது வீடுகளில் கொலு பொம்மைகளை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
Successfully posted