
NewsJ is a popular online newsportal and going source for technical and digital content for its influential audience around the globe. You can reach us via email or phone.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 85 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 653 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 85 ஆயிரத்து 493 ஆக உயர்ந்துள்ளது. 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 3 லட்சத்து 47 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ள மகாராஷ்டிராவில், பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 761ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 90 ஆயிரத்து 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 50 ஆயிரத்து 74 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில், 87 ஆயிரத்து 360 பேரும், குஜராத்தில் 32 ஆயிரத்து 557 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 23 ஆயிரத்து 492 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேற்கு வங்கத்தில் 18 ஆயிரத்து 559 பேரும், ராஜஸ்தானில் 18 ஆயிரத்து 14 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது.
Successfully posted