
NewsJ is a popular online newsportal and going source for technical and digital content for its influential audience around the globe. You can reach us via email or phone.
பிரதமர் நரேந்திர மோடி, வரும் 28-ம் தேதி இரண்டு நாள் பயணமாக ஜப்பான் செல்லவுள்ளார்.
இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான 12-வது உச்சி மாநாடு, கடந்த ஆண்டு , குஜராத் மாநிலம், காந்தி நகரில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கலந்து கொண்டார்.
இந்த ஆண்டுக்கான உச்சிமாநாடு ஜப்பானில் நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வரும்
28-ம் தேதி ஜப்பானுக்கு புறப்பட்டு செல்கிறார்.
இந்த மாநாட்டில் இருதரப்பிலான பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக , அகமதாபாத் - மும்பை இடையிலான புல்லட் ரயில் திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுத்துள்ளது குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
Successfully posted