
NewsJ is a popular online newsportal and going source for technical and digital content for its influential audience around the globe. You can reach us via email or phone.
கோவை சீரநாயக்கன் பாளையத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி, மகளிர் நீதிமன்ற நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கடந்த 26ம் தேதி நண்பருடன் சென்ற பிளஸ் 1 மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. உடன் சென்ற மாணவியின் நண்பரை அந்த கும்பல் கடுமையாக தாக்கியது. இந்த சம்பவத்தில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில், மகளிர் நீதிமன்ற நீதிபதியிடம், நடந்த சம்பவங்களை மாணவி வாக்குமூலமாக அளித்தார். அவரது வாக்குமூலம் அடிப்படையில் சிறையில் உள்ள 6 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
Successfully posted