
NewsJ is a popular online newsportal and going source for technical and digital content for its influential audience around the globe. You can reach us via email or phone.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்து உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், பேரணாம்பட்டு மசூதி தெருவில் வீடு இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்ததாகவும், விபத்தில் உயிரழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உயிரிழந்தவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயாகவும், காயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாயாகவும் அரசு நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Successfully posted