
NewsJ is a popular online newsportal and going source for technical and digital content for its influential audience around the globe. You can reach us via email or phone.
ஏழு காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் தலா ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ராடியன்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து கடந்த 2014 ம் ஆண்டு 2 கோடி ரூபாய் கடனாக பெற்றிருந்தனர்.
அதற்காக அளிக்கப்பட்ட ஏழு காசோலைகள் சரத்குமார், ராதிகா சரத்குமார் வங்கி கணக்கில் பணம் இல்லை என திரும்பி வந்துவிட்டதால் ராடியன்ஸ் நிறுவனம் செக் மோசடி வழக்கு தொடர்ந்தது.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்த இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்பி எம்எல்ஏ குளிரான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி சரத்குமார் நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் பங்குதார்ர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். மொத்தம் 7 வழக்குகளில் சரத்குமார் மீதான ஐந்து வழக்குகளில் தலா ஓராண்டும், மீதமுள்ள இரண்டு வழக்குகளில் சரத்குமார் ,ராதிகா சரத்குமார் பங்குதாரர் ஸ்டீபன் ஆகியோருக்கு தலா ஓராண்டும் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Successfully posted