
NewsJ is a popular online newsportal and going source for technical and digital content for its influential audience around the globe. You can reach us via email or phone.
கோவை வடவள்ளியில், இருசக்கர வாகனத்தில் சென்றவரை வழிமறித்து, 2 கிலோ தங்க நகைகள் மற்றும் 7 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடிக்கும் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியானது.
கோவை வடவள்ளியை சேர்ந்த சண்முகம் என்பவர், தங்க நகைகளை ஹால்மார்க்காக மாற்றித் தரும் பணியை செய்து வருகிறார். சத்தியமங்கலித்திலிருந்து 2 கிலோ நகையை பெற்றுக் கொண்டு, பேருந்தில் கோவை வந்த சண்முகம், காந்திபுரத்திலிருந்து வடவள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் இரவில் சென்றுள்ளார்.
அப்போது அவரை வழிமறித்த மர்ம நபரக்ள் இருவர், அவரை தாக்கி, அவரிடமிருந்த 2 கிலோ நகை மற்றும் 7 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர். இது அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகி, தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சண்முகம் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்கண்ட செய்தியின் cctv-காட்சிகளை காண
↕↕↕ ↕↕↕
Successfully posted