
NewsJ is a popular online newsportal and going source for technical and digital content for its influential audience around the globe. You can reach us via email or phone.
நீதிமன்ற தீர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் எந்தவொரு விவரத்தையும் பின்பற்றாமல் உள்ளதால் கர்நாடகா அரசுக்கு, தமிழக அரசு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.
அகில இந்திய நாடார் பேரவை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியின் குறுக்கே எந்தவொரு அணை கட்ட வேண்டும் என்றாலும் மூன்று மாநிலங்களில் இருந்து ஒப்புதல் பெற வேண்டும் என்றும், கர்நாடக அரசு நீதிமன்ற தீர்ப்புகளை பின்பற்றாமல் செயல்படுவதாக தெரிவித்தார். இதனால், கர்நாடக அரசுக்கு, தமிழக அரசு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் குறிப்பிட்டார். எனவே, அணை விவகாரத்தை சட்ட ரீதியாக சந்திப்போம் என்று அவர் கூறினார்.
Successfully posted