• Sat, Sep 2025

அதிமுக கவுன்சிலரின் வார்டுக்கு நிதி ஒதுக்காத திமுக ஊராட்சி தலைவர்

அதிமுக கவுன்சிலரின் வார்டுக்கு நிதி ஒதுக்காத திமுக ஊராட்சி தலைவர்

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக குற்றச்சாட்டு. அதிமுக கவுன்சிலர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தர்ணா.

விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சியில் மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாத திமுக ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து அதிமுக கவுன்சிலர் தர்ணாவில் ஈடுபட்டார். 19-வது வார்டு  அதிமுக கவுன்சிலரான பர்குணன் என்பவருக்கு, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் தனது வார்டு பகுதியில் பணிகளை மேற்கொள்ள  திமுக ஊராட்சி மன்ற தலைவர் நிதி ஒதுக்காமல் உள்ளதாக குற்றம்சாட்டி அதிமுக கவுன்சிலர் பர்குணன் அலுவலக வாயிலில் தர்ணாவில் ஈடுபட்டார்.

NEWSJ TV

News Editor and News Collector